Posts

Showing posts from February, 2017

அன்பு

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந...

கண்ணா ஜெயிச்சுட்டே!

காலை, 10:00 மணி - ஊர் பிரமுகர்கள் சிலருடன், ஏதோ காரியமாய் போய்க் கொண்டிருந்தார் தலைவர் பழனி.அப்போது, எதிரில் வந்த கார் ஒன்று, அவர்களை பார்த்ததும், ஓரங்கட்டி நின்றது.அதிலிருந்து இறங்கிய இளைஞனை, 'யாரு...' என்பது போல் பார்த்தார், பழனி.அந்த இளைஞன், ''நான், வேலுச்சாமி மகன் கண்ணன்,'' என்றதும், பழனி உட்பட, உடன் இருந்தோரும், 'ஆஹா...' என்று ஆச்சர்யப்பட, அடுத்த நொடி பழனிக்கு ஆச்சரியம் போய், ஏமாற்றமும், குற்ற உணர்வும் எழுந்தது.''அப்புறம் என்னை வந்து பார்,'' என்று, சொல்லி, நடையை தொடர்ந்தவருக்கு, மனதில், பழைய சம்பவம் விரிந்து, ஊசலாடியது.ஊர் தலைவரான பழனி, அந்த ஊரிலேயே வசதி படைத்தவராகவும் இருந்தார். ஊர் மக்கள், அவரிடம் ஏதாவது கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் கூட, அவருடைய வலது கையான, மாரிசாமி மூலம், பக்குவமாய் தெரிவிப்பரே தவிர, நேருக்கு நேர் நின்று பேச மாட்டார்கள்; அவ்வளவு மரியாதை.பழனியின் பண்ணையில் வேலை செய்யும், வேலுச்சாமி மகனான கண்ணன், அப்போது, எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளி நேரம் போக, அவர் வீட்டில், எடுபிடி வேலை செய்வது வழக்கம்...