இப்படித்தான் என் மனைவி
அந்தக் கதையை அவள்தான் முதலில் படித்திருந்தாள். அவள் என்றால் வேறு யாருமில்லை. என் மனைவி லட்சுமி. "ஏங்க இந்தக் கதையைப் படித்துவிட்டீர்களா?'' கேட்டுக் கொண்டே என்னருகில் வந்தாள். "எந்தக் கதை?'' என்று கேட்டுக் கொண்டே கணிப்பொறித் திரையிலிருந்து கண்ணை விலக்கி ஏறெடுத்து அவளைப் பார்த்தேன். அவள் கையில் இந்த வாரப் பத்திரிகை ஒன்று இருந்தது. நான் இன்னும் படிக்கவில்லை. "இப்பதானே வந்திருக்கு? எந்தக் கதை சொல்லு?'' நான் சொல்லி முடிக்கும் முன்னே என் கையில் வாரப் பத்திரிகையைத் திணித்துவிட்டு இந்தக் கதையை உடனே படியுங்க'' உத்தரவு போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் போனாள். "அப்படி என்ன சமாச்சாரம் இந்தக் கதையில் இருக்கு?' யோசித்துக் கொண்டே கணிப்பொறியை அணைத்தேன். அவள் காட்டிவிட்டுப் போன பக்கத்தைப் புரட்டிக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். கால்வாசிக் கதையைப் படித்தவுடனேயே, அவள் எதற்கு இந்தக் கதையைப் படிக்கச் சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்துவிட்டது. இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி, "இந்தக் கதையில் என்ன...